மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை



நா
ளை நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சுகள் குறிப்பிடுகின்றன.

வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

இன்றைய தினம் வழங்கப்படும் விடுமுறைக்குப் பதிலாக வேறொரு விடுமுறை நாளில் பாடசாலை கல்வி செயற்படுகளை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தல் வாக்கெண்ணும் நிலையங்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பாடசாலைகள், கல்யியற் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :