மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா பொரள்ளை கனத்தை மயானத்தில் தனக்கான கல்லறைக்கு இன்று 25-03-2014 காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டினார்.
தனது தாயின் கல்லறைக்கு அருகிலேயே அவர் தனக்கான கல்லறையும் தேர்ந்தெடுத்து அத்திவாரமிட்டார். அதற்கு முன்னர் அங்கு மதவழிபாடுகளும் இடம்பெற்றன.
அமைச்சர் மேர்வின் சில்வா, இன்று காலை அவரது கல்லறைக்கான கட்டுமான பணி தொடங்கும் என்று நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்திருந்தார்.
மறைவுக்கு பின்னர், தனது சாம்பலை இங்கு அடக்கம் செய்ய வேண்டுமென விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment