முஸ்லிம் மதத்தை பரப்பி இலங்கையை சீரழிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் - ஞானசார தேரர்


JM-லங்கையில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் மிதமிஞ்சிய முஸ்லிம் குடியேற்றங்களை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் சிங்கள தமிழ் மக்களையும் இணைத்து குடியமர்த்த வேண்டுமென பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் எனவும அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞனசார தேரர் தெரிவித்தார்.

இன்று 20-03 - 2014 வியாழக்கிழமை கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தேரர் மேலும் தெரிவிக்கையில்,

வில்பத்துவில் இருந்து மன்னார் வரையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் குடியேற்றங்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு வடக்கிலும் முஸ்லிம் ஆதிக்கத்தை பரப்பச் செய்து சிங்கள, தமிழ் மக்களை புறக்கணிக்கும் இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

முஸ்லிம் மதவாதத்தை பரப்பி இலங்கையை சீரழிக்கும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாடடோம் என அவர் மேலும் தெரிவித்தார். VI
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :