சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபையை பெற்றுக்கொடுக்க அமைச்சர் அதாவுல்லா இணக்கம் தெரிவித்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிறாஸ் மீறாசாஹிப் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் 24 ஆம் திகதி சாய்ந்தமருது ஊர் பிரமுகர்கள், எனது ஆதரவாளர்கள் சகிதம் அமைச்சர் அதாவுல்லாவுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் எமது ஊரின் பிரதான தேவைகள், மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளோம். எமது பிரதான கோரிக்கை சாய்ந்தமருது பிரதேச சபையாகும்.
இதனை பெற்றுத்தர அமைச்சர் அதாவுல்லா உத்தரவாதம் வழங்குவாராயின் அவருடன் இணைந்துகொள்ள தயாராகவிருக்கிறேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment