நான் வீட்டுக்கூரையில் வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன்- பிரபல பாப் பாடகி மடோனா

நியூயோர்க்கிற்கு வந்த புதிதில் தான் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாக பிரபல பாப் பாடகி மடோனா தகவல் வெளியிட்டுள்ளார்.

55வயதாகும் மடோனா தனது இளமைக் கால நிகழ்வுகள் தொடர்பில், ஹார்பெரின் பசார் சஞ்சிகைக்கும மனந்திறந்து பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். 

 நியூயோர்க் என்னை இரு கைகளாலும் அரவணைத்து வரவேற்ற நகரம் இல்லை. நியூயோர்க்கிற்கு இடம்பெயர்ந்த முதலாவது வருடம், நான் கத்திமுனையில், வீட்டுக்கூரை ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன்.

எனது வீடு மூன்று முறை கொள்ளையடிக்கப்பட்டது. நான் மிகப்பெறுமதியாக கருதும் எனது வானொலியை ஒரு முறை திருடிச்சென்றார்கள். நான் வெறுத்து ஒதுஙக்கூடிய வாழ்க்கை நிலையிலிருந்தே எனது ஒவ்வொரு முன்னேற்றகரமான பாதையும் வடிவமைக்கப்பட்டது.

பல தடவைகள் சப்பாத்துப் பெட்டி போன்ற எனது படுக்கையறையில் தன்னந்தனியாக கட்டுன்று அழுதிருக்கின்றேன். என்னை நான் திடப்படுத்தி மன உறுதியுடன் இச்சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடியிருக்காவிடின் இன்று இந்த உலகில் எங்கிருந்திருப்பேன் என தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 35 டாலர்களுடனும், பல கனவுகளுடனும் நியூயோர்க்கிற்கு வந்தவர் மடோனா. இன்று உலகின் முன்னணி பாப் பாடகர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து பல கோடி ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :