கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொள்ளையர் இருவர் கைது

போதை கலந்த உணவு வகைகளை கொடுத்து பணம் மற்றும் உடைமைகளை திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான பெயர்களில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இவர்கள் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வத்தளை, அனுராதபுரம் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இந்த சந்தேகநபர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதையூட்டும் ஒருவகை உணவை உண்ணக்கொடுத்து ஒருவரிடமிருந்த உடைமைகளை இந்த சந்தேகநபர்கள் அண்மையில் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :