6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சி

ங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது.

இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது.

அதில் ரூ.97,010 கட்ட வேண்டும் என்றும், பாஸ்வேர்டுகளுக்காக ரூ.7,425 கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தவறாக பில் அனுப்பிவிட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது, தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது.

தன்னுடைய குழந்தைகள் தான் சுட்டியாச்சே, அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.

அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் இவ்வளவையும் வாங்கியுள்ளனர்.

உடனடியாக இணையத்தள நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறவே, அவர்களும் பில்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்வேர்டை மாற்றி விட்டாராம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :