31வயதுடைய இரு பிள்ளையின் தாய் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆரச்சிகட்டு - போகஹவெட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண் கடந்த 28 ஆம் திகதி சிலாபம் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த போது வெள்ளை வேனில் வந்த நபர் ஒருவர் தன்னை பலாத்காரமாக கடத்திச் சென்று பண்டாரவத்த பகுதியில் உள்ள அவருடைய விடுதியில் வைத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிலாபம் பொலிஸ் நிலையத்தில் குறித்தப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் குறித்தப் பெண்ணால் அடையாளம் காட்டப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :