10ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர் - பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

ரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடைய அக்காள் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி, உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அங்கு மருத்துவரிடம் குழந்தையை காட்டிவிட்டு மருந்து சீட்டு வாங்கினார். பின்னர் மருந்து வாங்கும் பகுதிக்கு சென்று வரிசையில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், திடீரென்று அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதை எதிர்பாராத அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

இதைப் பார்த்து திகைத்து நின்ற, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர் அவரை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வே.புலியூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 19) என்பது தெரிய வந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :