சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
காலி கடற்படை முகாமிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
88 பேரே கைது செய்யப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த போதும், அவர்களது தொகை 111ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் ருவன்புத்தா என்ற படகில் கடந்த 7ஆம் திகதி பேருவளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸார் மூலமாக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலி கடற்படை முகாமிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து இவர்கள் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
88 பேரே கைது செய்யப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்த போதும், அவர்களது தொகை 111ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் ருவன்புத்தா என்ற படகில் கடந்த 7ஆம் திகதி பேருவளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸார் மூலமாக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment