திதுலன மூலம் கல்முனை உலமா சபைக்கு ஹரீஸ் அநியாயம் செய்துள்ளார்-முபாறக்



( கல்முனை நிருபர் )

ல்முனை திதுலன வெளிச்ச ஏற்பாட்டின் போது கல்முனையின் உலமா சபைக்கோ முஹம்மதிய்யா பள்ளிவாயலுக்கோ எதுவித நிதியும் வழங்காமல் புறக்கனித்தமையை தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கல்முனை திதுலன என்ற அபிவிருத்தித்திட்ட நிகழ்வுகள் சம்பந்தமான விபரத்தில் கல்முனை உலமா சபைக்கென ஒரு காரியாலயத்தை கட்டுவதற்குரிய உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை கல்முனை மாநகர எல்லக்குள் வாழும் உலமாக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய அநியாயமாகும்.

கிழக்கு முஸ்லிம்களின் தலைநகராக விளங்கிய கல்முனை உலமா சபைக்கென இதுகாலவரை ஒரு தனியான காரியாலயம் இல்லை என்பதை கடந்த பத்து வருடங்களாக நாம் சுட்டிக்காட்டி வருகிறோம். 

ஆனாலும் இதுவரை மக்கள் வாக்குகள் பெற்ற அரசியல்வாதிகள் இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இத்தனைக்கும் கடந்த கால தேர்தல்களில் கல்முனை உலமா சபையை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களாக செயற்பட்டதோடு அவர்களின் மேடைகளில் கிறாஅத், துஆ ஓதுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். 

அப்படியிருந்தும் கல்முனை வெளிச்சமடையும் போது கல்முனை உலமா சபையை தொடர்ந்தும் இருட்டில் விட்டுள்ளமை மிகப்பெரிய அநியாயமாகும்.

அதே போல கல்முனை வரலாற்றில் முதலாவது ஜும்ஆ பள்ளிவாயலாக அரசாங்கத்தில் பதியப்பெற்ற முஹம்மதிய்யா பள்ளிவாயலுக்கும் எது வித நிதியுதவியும் வழங்குவதாக நிகழ்ச்சித்திட்டத்தில் இல்லை. இதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களான இப்பள்ளியை சேர்ந்தோருக்கும் அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதோடு இவ்வாறான ஓரங்கட்டலினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரின் நன்றி கெட்ட குனம்
வெளிக்காட்டப்பட்டுள்ளது. 

இவற்றின் மூலம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணம் சிலருக்கு மட்டும் என தெரிய வருவதுடன் அப்பணத்தை குறிப்பிட்ட சில ஆதவாளர்களது நலனைக்கொண்டு செயற்படுவதன் மூலம் ஊழல் மோசடிக்கு வழிவகுக்கலாமென அஞ்சுகிறோம்.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது மேற்படி முஹம்மதிய்யா பள்ளிவாயலை சேர்ந்தோரில் 90 வீதமானோர் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நிசாம் காரியப்பக்கு வாக்களித்தனர். 

அதே போல் 98 வீதமானோர் கடந்த
பொதுத்தேர்தலில் ஹரீசுக்கே வாக்களித்தனர். இவ்வாறிருந்தும் மேற்படி பள்ளிவாயலும், உலமா சபையும் ஓரங்கட்டப்பட்டமை
கண்டிப்புக்குரியதாகும். இத்தகைய நன்றி கெட்டவர்கள் பின்னால் இனியும் நிற்பதா என்பதை இனியாவது மேற்படி பள்ளிவாயல் ஆதரவாளர்களும், கல்முனை உலமா சபையும் சிந்திக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :