வடக்கில் 539 தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்.


கிளிநொச்சி  செய்தியாளர் 

கி
ளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 539 வன்னி தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி, வட மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் விக்னேஸ்வரன், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல், வட மராட்சி வலய கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எனினும் குறித்த நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :