லண்டனில் குஜராத்தை சேர்ந்த தாயும் இரு குழந்தைகளும் மர்மமான முறையில் மரணம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் லண்டனில் மர்ம மரணம்!
லண்டன்: லண்டனில் குஜராத்தை சேர்ந்த மூவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண்  அங்குள்ள பள்ளியில்  லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹீனா சோலங்கி மற்றும் அவரது பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 ஆகிய மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஆனால் இந்த இறப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

 இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீனா சோலங்கி லண்டனில் அவரது கணவரின் பெற்றோருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.இன்னேரம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :