பாராளுமன்றம் இன்று பகல் 1 மணியளவில் கூடியபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ரிசானா நபீக் விடுதலை குறித்து அரச தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, ரிசானாவை விடுதலை செய்ய சவுதி அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார்.
ஆனால் அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கும் வேளையில் ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றில் ரிசானாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment