சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்..

ஜே.எப்.காமிலா பேகம்-

லங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று இரவு காலமானார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட வானொலிகளில் மூத்த அறிவிப்பாளராகவும், பல்துறைக் கலைஞராகவும் சி.நடராஜசிவம் செயற்பட்டிருந்தார்.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஊடகத்துறைக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள அவரது மறைவுக்கு, எமது importmirror செய்திப்பிரிவு சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகளை உரித்தாக்குகிறோம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -