ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் இதழில் ( journal of hospital infection) கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் ( Günter Kampf ) கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடிருக்கும்.
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்தியோகமான சிகிச்சை முறை எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதே முக்கியமானதாகும்.
இந்த வைரஸ் கைகள் மூலமாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களிலிருந்தும் பரவக்கூடும் என கூறியுள்ளார்.