ஏ.எஸ்.எம்.ஜாவித்-
வடக்கு மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று (23.10.2015) பகல் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மருதானை சாஹிரா கல்லூரிக்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது 1990ஆம் ஆண்டு ஓக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு இம்மாதத்துடன் கால் நூற்றாண்டை தாண்டும் நிலையில் அம்மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாக இருப்பதையிட்டு அதனை உடன் நிவர்த்தி செய்யுமாறு கோரி இதன்போது அரசுக்கு கோரிக்கை ஆர்ப்பாட்டக் காரர்களால் விடுக்கப்பட்டது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் உறுப்பினர் முஹமட் நிஷார் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சரப்டீன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர்களின் உணர்வுகளை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர்.
- 'நல்லாட்சி அரசே, எங்களை சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ விடு', முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
- அட்டாளைச்சேனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!