கொழும்பு – 13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மகளிர் அணியின் எதிர்கால செயற்பாடுகள், கலை மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள், உறுப்பினர்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2026–2027 காலப்பகுதிக்கான மகளிர் அணியின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு நியமிக்கப்பட்டனர்.
தலைவி – திருமதி சிவகெளரி (சுடரி)
உப தலைவி – திருமதி ஷிபானியா
செயலாளர் – திருமதி தமிழ்செல்வி (தென்றல்)
உப செயலாளர் – திருமதி ஸ்ரீமதி
பொருளாளர் – திருமதி சூரியகுமாரி
இலத்திரனியல் ஊடகப் பொறுப்பாளர் – செல்வி பிரபா
மேலும், அமைப்பின் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஏனைய இணைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாக சபை, மகளிரின் கலைத் திறன்கள், தலைமைத்துவ ஆற்றல்கள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் அணியின் உறுப்பினர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விசேட அதிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment