அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்வியமைச்சினால் நியமனம்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18ஆவது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களிடம் இருந்து இன்று 2025.08.22 நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2025.02.24 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18வது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டு கல்முனை கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

நீண்டகாலம் பிரதி அதிபராகவும் கடந்த ஒரு வருட காலமாக பதில் அதிபராகவும் குறித்த பாடசாலையில் செயற்பட்டு வந்த ரீ.கே.எம். சிராஜ் அவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :