சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவிகளை விழிப்பூட்டும் செயலமர்வு



நூருல் ஹுதா உமர்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் ஸ்மார்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் பொறுப்பதிகாரியான ஏ.எல்.ஏ. வாஹீத் அவர்கள் கலந்து கொண்டார்.

மேற்௯றித்த செயலமர்வில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல் அதிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல், துஷ்பிரயோகத்தின் வகைகள், அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு கையாளுதல், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடைமுறையை அறிந்து கொள்ளுதல் என்பது பற்றிய தகவல்களை நிகழ்த்துகை மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு குழு தலைவர், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :