சிரேஷ்ட ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் எம்.பி வேண்டுகோள்



நூருல் ஹுதா உமர்-
"நாம் ஊடகர்” பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரான கடுமையான செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் யூ.எல்.மப்றூக் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

மேற்படி தாக்குதல் சம்பவம் ஊடகத் துறைக்கு பெரும் சவாலாகும். ஜனநாயகத்தை மதிக்கும் எவராலும் இதுபோன்ற வன்முறையை அனுமதிக்க முடியாது.

யூ.எல்.மப்றூக் போன்ற நேர்மையான மற்றும் நடுநிலை செய்தியாளர்களை குறிவைக்கும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அரசியல் வாங்குரோத்தின் வெளிப்பாடாகும். வன்முறை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு, கடந்த காலத்தில் மக்கள் தக்கபாடம் கற்றுக்கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ள அவர், இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :