மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை



மாளிகைக்காடு செய்தியாளர்-
டந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் நேற்று (26) காலை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் பள்ளிவாசலின் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடைபெற்றது.

சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் உலமாக்கள், மாளிகைக்காடு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :