இவர் 1996.12. 02 ஆம் திகதி அம்பாரை மாவட்ட செயலகத்தில் சிறாப்பராக முதல் நியமனம் பெற்று, 12 ஆண்டுகள் கடமையாற்றி அதன் பின்னர் 2008.01.01 ஆந் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று அதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் 2017.01.01 ஆந் திகதி முதல் மீண்டும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக (சிறாப்பராக) கடமையாற்றி வந்த நிலையில் தனது 28 வருடகால சேவையின் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவ் உத்தியோகத்தரின் 28 வருட அரச சேவையைப் பாராட்டி கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைகளின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















0 comments :
Post a Comment