சாய்ந்தமருது கமு/ மழ்ஹருஷ் ஷம்ஸ் அதிபர் விவகாரம்; சூடான ஊடக சந்திப்பு!



டந்த ஜனவரி மாதம் முதல் இப்பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் பெற்று, அதிபர் ஜனாபா எம். சி. நஸ்லின் றிப்கா அவர்கள் இப்பாடசாலையை சிறப்பாக நிருவகித்து வரும் நிலையில் தேசியப் பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கல்முனை வலயத்துக்கு திடீரெனவந்த வேறு ஒரு அதிபரை இப்பாடசாலைக்கு அதிபராக நியமித்து உள்ளதை கண்டித்தும் குறித்த அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்முனை கல்விக் காரியாலயம் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஆளுநர் போன்றோருக்கு சாய்ந்தமருது கமு/ மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய சமூகம் வேண்டுகோள் விடுக்கும் விதத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

சாய்ந்தமருது கமு/ மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர் சங்கம், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி ஊடக சந்திப்பு 25 டிசம்பர் 2023 இல் சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி ஊடக மாநாட்டில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர். ஜனாபா றிப்கா அதிபர் அவர்கள் இப்பாடசாலையை மிகவும் சிறப்பாக கடந்த ஒரு வருட காலமாக நிருவகித்து வருவதாகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் புறக்கிருத்திய வளர்ச்சியிலும் இப்பாடசாலை மேலோங்கி வருவதாகவும் இதனை சீர்குலைப்பதை தங்களால் அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி விடயம் சம்பந்தமாக கல்வி அதிகாரிகளும் மற்றும் மேலதிகாரிகளும் கூடிய கரிசனை எடுத்து பாடசாலையின் முன்னேற்றத்தில் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவர்களை வேண்டிக் கொண்டனர்.




















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :