ஏறாவூரிலும் கன்டெய்னர் சொப் வியாபார நடடிக்கை விரைவில்.



உமர் அறபாத்-
றாவூரில் கன்டெய்னர் சொப்களை நிறுவுவதற்கு நகர சபை நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூர் ஒத்துழைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் உதவியுடன் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதான வீதி, புன்னக்குடா வீதி மற்றும் வாவிக்கரைப் பூங்கா வளாகம் ஆகிய இடங்களில் இந்த கன்டெய்னர் கடைகள் நிறுவப்படவுள்ளன.

உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திறந்த கேள்வி அடிப்படையில் வர்த்தகர்களுக்கு இக்கடைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதற்கென ஏழு கன்டெய்னர்கள் தற்போது தருவிக்கப்பட்டுள்ளதுடன் அவை கடைகளாக வடிவமைக்கப் பட்டதும்

கேள்வி அறிவித்தல் வெளியிடப் படவுள்ளதாக நகரசபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :