ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தை புணரமைத்து புதிய நிர்வாக சபையை தெரிவு செய்யும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
107 ஆவது அகவையில் கால் பதித்துள்ள பாடசாலை பல்வேறு வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளது.
இவ்வாறு சாதனைகளை நிலைநாட்டி வரும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எனவே, குறித்த கூட்டத்தில் சகல பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் வேண்டிக் கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment