சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையின் தேவைகள் நிவர்திக்கப்படாது புறக்கணிப்பு



றிப்தி அலி-
ன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற விடயம் தகவல் அறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வருகிறது.

வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தினாலும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினாலும் சிலாவத்துறை வைத்தியசாலையின் உடனடித் தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் வடமாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இம்மாவட்டத்தில் காணப்படுகின்ற நான்கு பிரதேச வைத்திய சாலைகளில் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு மாத்திரம் மருத்துவ ஆய்வுகூட பரிசோதகர் இதுவரை நியமிக்கப்படாத விடயமும் தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் வெளியாகி உள்ளது.

சுமார் 35 ஆயிரம் மக்கள் வாழும் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவிற்குள் காணப்படுகின்ற ஒரே ஒரு வைத்தியசாலை இதுவாகும். அத்துடன் இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற இரண்டு கடற்படை முகாம் இரண்டு ராணுவ முகாம் மற்றும் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் கடமையாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சிலாபத்துறை வைத்திய சாலையிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த வைத்தியசாலைக்காக நாளாந்தம் சராசரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய 50 மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் மருத்துவ ஆய்வு கூட பரிசோதகரின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவிக்கின்றது.

இப்ப பரிசோதனையினை வைத்தியசாலையிலேயே மேற்கொள்வதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மருத்துவ ஆய்வு கூட பரிசோதருக்கான ஆளணி இன்றுவரை வெற்றிடமாகவே காணப்படுகின்றது எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் பணிமனை குறிப்பிட்டது.

எனினும் இந்த வைத்தியசாலையை விட மிகக் குறைவான 15 தொடக்கம் 20 வரை மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகளை நாளாந்தம் மேற்கொள்ளும் ஏனைய மூன்று வைத்தியசாலைகளுக்கும் நிரந்தர மற்றும் பதில் அடிப்படையில் மருத்துவ ஆய்வு கூட பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ள விடையமும் தகவல் அறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் மருத்துவ ஆய்வுகூட விபரம்

வைத்திசாலையின் பெயர்

ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

ஆய்வுகூட பரிசோதகர் நியமிக்கப்பட்ட திகதி

நியமனத்தின் தன்மை

பரிசோதனையின் எண்ணிக்கை (நாளாந்தம்)

அடம்பன் பிரதேச வைத்தியசாலை

2019

11.02.2019

நிரந்தரம்

15 - 20

முருங்கன் பிரதேச வைத்தியசாலை

2020

23.03.2022

பதில்

15 - 20

பேசாலை பிரதேச வைத்தியசாலை

2019

18.11.2021

பதில்

15 - 20

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை

2022

-

-

50

தகவல் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை

 



எவ்வாறாயினும் இவ்வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வு கூட பரிசோதகர் வெற்றிடத்தினை நிரப்புவதற்கான கோரிக்கை தொடர்ச்சியாக உரிய தரப்பினருக்கு முன்வைக்கப்பட்டு வருகின்றது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தகவல் அதிகாரியான திருமதி. டீ.எம்.பி. லோகு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வைத்தியசாலைக்காக தொண்டர் அடிப்படையில் செயல்படும் மருத்துவ ஆய்வு கூட பரிசோதகரின் மாதம் ஒன்று காண 30 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே செலுத்தி வருவதாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினரும் முசலி பிரதேச சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள ஏனைய மூன்று வைத்தியசாலைகளிலும் கடந்த 2019 ஆம், 2020ஆம் ஆண்டுகளில் மருத்துவ ஆய்வு கூடம் திறக்கப்பட்ட போதிலும், இங்கு 2022 ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட்டுள்ளது. "இதற்கு வடமாகாண சுகாதாரத் திணை கிழக்கின் திட்டமிட்டு எழுத்தடிப்பு பிரதான காரணமாகும்." என அவர் குற்றஞ்சாட்டினார்.

எனினும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் முயற்சியின் காரணமாகவே, மருத்துவ ஆய்வு கூடத்திற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது" என முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறினார்.

இம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பலம்பொருந்திய அமைச்சராக காணப்பட்டார். அது போன்று கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுகின்ற காதர் மஸ்தான் தற்போது இராஜாங்க அமைச்சராக செயல்பட்டு வருகின்றார்.

இவர்கள் இருவரும் இந்த வைத்தியசாலையின் முக்கிய தேவைகளில் ஒன்றான மருத்துவ ஆய்வுகூட பரிசோதகரை நியமிப்பதற்கான எந்த முயற்சியினையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமையே (30) தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் விரைவில் கலந்துரையாடி நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார். (விடிவெள்ளி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :