கெபினட் அமைச்சசர்கள் 30 பேர் வரை அதிகரிக்கலாம்?



J.f.காமிலா பேகம்-
யாப்பின்படி கெபினட் அமைச்சசர்கள் 30 பேர் வரை அதிகரிக்கலாம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களால் மேலும் கெபினட் அமைச்சர்களாக பலரருக்கு புதிதாக நியமனம் கொடுக்க உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

அரசில் மீதமாக உள்ள அமைச்சுப்பதவிகளை நியமிக்க வேண்டும் என, பல சந்தர்பங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சியினால் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.பொதுஜனபெபெரமுன கட்சியில் ஜோன்ஸ்டன் பெனேன்டோ,பவித்ரா வன்னியாராச்சி, சீ.பி.ரத்னாயக்க, எஸ்.எம்.சந்திரசேன அமைச்சுப்பதவிகள் கிடைக்க உள்ளதுடன், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சி தலைவர் ஜீவன் தொண்டமான்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் கிடைக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் சமகி பலவேகய கட்சியிலும் ஒருவர் அல்லது இருவருக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் தேர்தல் ஒன்றை நடாத்த இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமே.

(தகவல் மாற்று ஊடகம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :