அம்பாரை மாவட்டத்தில் இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் நிகழ்வு


எம்.என்.எம்.அப்ராஸ்-
ஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் வகையில் வை-சென்ச் (y-change )திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இதனடிப்படையில் மாவட்ட இளைஞர்கள் நல்லிணக்க குழுவிற்க்கான திட்ட அறிமுக நிகழ்வு (26)இன்று அம்பாரையில் இடம்பெற்றது .

அம்பாரை மாவட்டத்தில் இளைஞர்கள் நல்லிணக்க குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க செயற்ப்பாடுகள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதில் வை-சென்ச் y-change திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ. சுதாவாசன்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே. டி. ரோகிணி , எச். எஸ். ஹசனி, டப்ளியு.எம்.சுரேகா, எம்.எல்.ஏ.மாஜீத்,சமாதான தொண்டர்கள்,உட்பட அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :