பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்காக இன்று (16) பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த உலர் உணவுப் பொதிகள் ஹியூமெடிகா லஙாகா நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டன. இதில் சுமார் 22 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பொதியில் அத்தியவசிய பொருட்களை உள்ளடக்கியுள்ளது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மஹிந்த வனசிங்க, பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment