திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையானது இன்று(21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தமக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் எனவும், தற்காலிக கொரோனா சீருடைகளை மத்திய அரசாங்கம் வழங்கியும் தங்களுக்கு இன்னும் வைத்தியசாலை நிர்வாகம் குறித்த சீருடைகளை வழங்கவில்லை, எனவே அதனை உடனடியாக வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைத்தியசாலையில் கடமையிலிருந்த 150 இற்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து கொரோனா விசேட விடுமுறை வாரத்தில் ஒருமுறை வழங்குவதாகவும், தற்காலிக சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment