அன்று அந்நியமாயிருந்த அனர்த்தம் இன்று அந்நியோன்யமானது ஏன்?



அனர்த்தசெயலமர்வில் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் ஹனிபா 
காரைதீவு சகா-
ன்று அனர்த்தம் என்பது அபூர்வமாயிருந்தது. அப்படி அந்நியமாயிருந்த அனர்த்தம் இன்று சாதாரணநிகழ்வுகள்போல அந்நியோன்யமாகிவருகிறது. இதற்கு மனிதநடத்தைகள்தான் காரணம் எனலாம்.
இவ்வாறு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வை ஆரம்பித்துவைத்துரையாற்றிய சம்மாந்துறை பிரதேசசெயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா கவலை தெரிவித்தார்.

குறித்த செயலமர்வு சம்மாந்துறை பிரதேசசெயலக மேல்தள கேட்போர்கூடத்தில் நேற்று(7) முன்னணியின் இணைப்பாளர் செல்வி யு.எல்.ஹபிலா எஸ்.நிஷாந்தினி தலைமையில் நடைபெற்றது.
பிரதேசஅனர்த்தமுகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.நபீஸின் ஒழுங்கமைப்பில் உதவிபிரதேசசெயலாளர் எம்.எம்.ஆசீக் முன்னிலையில் நடைபெற்ற இச்செயலமர்வில் கிராமசேவைஅதிகாரிகள் பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அனர்த்தம் தொடர்பில் இத்தாலியில் பயிற்சிபெற்ற வளவாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அனுபவப்பகிர்வை மேற்கொண்டதுடன் காணொளி சகிதம் விளக்கவுரை நிகழ்த்தினார்.

அங்கு பிரதேசசெயலாளர் ஹனிபா மேலும் பேசுகையில்:

இன்றைய காலத்திற்குப்பொருத்தமான செயலமர்வு இடம்பெறுவதையிட்டு இம்முன்னணியை முதலில் பாராட்டுகிறேன்.முன்னணியின் ஸ்தாபகர் முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமாஇஸ்மாயில் செயற்றிட்டஅதிகாரி லைலாஉடையார் இணைப்பாளர் சகா ஆகியோருக்கும் நன்றிகள்.

அன்று ஆண்டில் இரண்டொரு விபத்துக்களே இடம்பெறும். அனர்த்தம் என்பதைக் கேள்விப்படுவதே அபூர்வம். ஆனால் இன்று உலகில் எங்கு பார்த்தாலும் அனர்த்தங்கள் தினம்தினம் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இலங்கையில் தினமொன்றுக்கு விபத்துக்களால் 8பேர் வரை இறக்கிறார்கள். நவீனம் அபிவிருத்தி நாகரீகம் நாடுபிடிக்கும் ஆசை வல்லாதிக்கம் என்ற போர்வையில் மனிதநடத்தைகள் மாறிவருகின்றன. அதன் விளைவே இவையெனலாம்.

இன்று இலங்கையில் இராஜாங்க அமைச்சுக்களைப்பார்த்தால் விளங்கும். அணுஅணுவாகப் பிரித்து அமைச்சின் செயற்பாடுகளை விபரித்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்பது ஜனாதிபதியின் திட்டம். என்றார்.

அடுத்து அனர்த்தம் இடம்பெற்றுவிட்டால் உடனடியாக வழங்கவேண்டிய முதலுதவிகள் தொடர்பில் செய்முறை விளக்கங்களினூடாக பயிற்சி வழங்கப்பட்டது. மயக்கம் தீக்காயம் பாம்புக்கடி விசர்நாய்க்கடி வீழ்ந்தவிபத்து மாரடைப்பு குருதிவெளியேறல் எலும்புமுறிவு போன்றவை இடம்பெற்றால் எவ்வாறு முதலுதவி வழங்குவது என்பதுபற்றி செய்முறைவிளக்கமளிக்கப்பட்டது.

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் மாவட்ட இணைப்பாளர் நௌசாட் வபி மற்றும் ஆசிரியர் எம்.அஜினாஸ் ஆகியோர் முதலுதவிப்பயிற்சியை செய்முறையுடன் வழங்கினர்.
பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வத்துடன் செயலமர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :