சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்.


எப்.முபாரக்-


திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 18 நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்குகள் நேற்றிரவு(4) தொடக்கம் இன்று (5)அதிகாலை வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச்சென்ற சந்தேகத்தின் பெயரில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கோமரங்கடவல - கல்கடவல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பக்மீகம மற்றும் அடம்பன பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 17 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகநபர்கள் மீது முன் குற்றங்கள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய விபரங்களை திரட்டிவருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :