பட்டப்பகலில் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதியாண்டு மாணவி கொலை-இராணு வீரர் கைது.

 எம்.எம்.நிலாமுடீன் -
யாழ் கடற்கரை பகுதியில் பட்டப்பகலில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதியாண்டு மாணவி ஒருவர் கழுத்து அறுத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

பேருவளையைச் சேர்ந்த ரோஷினி காஞ்சனா (29) எனவும் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியை வெட்டிக் கொலை செய்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளானர்.

இதன்போது அவ்விடத்தில் கூடிய இளைஞர்கள் இராணுவச் சிப்பாய்க்கு தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.

நாட்டில் இரண்டு வாரத்தில் 2 இளம் வைத்தியர்களை இழந்துள்ளோம் .

மட்டக்களப்பில் மலையக வாலிபன் 1 ம் வருடம்; தற்கொலை காஞ்சனா இறுதியாண்டு.இரண்டு கொலைகளிலும் தகாத உறவுகள்தான் காரணம் என்று அறியப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -