நிட்டம்புவ, மாத்தலான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட "கிதுள்கொழதெனிய ஏரி" மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

கஹட்டோவிட்ட ரிஹ்மி-
முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளருமான அதிமேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் முயற்சியில், அத்தனகல்ல பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நிட்டம்புவ, மாத்தலான பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட "கிதுள்கொழதெனிய ஏரி" இன்றைய தினம் (12) முன்னாள் ஜனாதிபதி அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.மோகனராஜா உள்ளிட்ட அதிகாரிகள், சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளர் அல் ஹாஜ் ருஷ்தி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -