இந்த நாட்டில் வாழும் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியலமைப்புக்கு முரணான சதித் திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றார்கள். அதேபோன்று சர்வதேச சமூகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் குழுவை ஏற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை. அந்தவகையில், ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் (11) நடாத்திய உரையில் இந்த நிலைமை இன்னும் உச்சமடைவது உறுதி.
சட்டவிரோதமாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம், அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உரிய காரணங்களை தெளிவுபடுத்துகையில், ஜனாதிபதியால் முன்வைக்கப்படுவதாவது, சில பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு சில தரப்புகள் நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்பதே ஆகும். இங்கு குறிப்பிடும் வகையில், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100, 150 மில்லியன் ரூபா மட்டுமல்லாமல், 500 மில்லியன் ரூபாவிற்கும் விலை பேசப்பட்டிருந்தார்கள். இவ்வாறு நடந்துகொண்டது எமது தரப்பினரல்ல. மாறாக இந்த அறிக்கையை விடுக்கும் ஜனாதிபதியினுடை நெருங்கிய பிரதிநிதிகளே ஆகும்.
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தங்களது பக்கத்துக்கு அழைத்து, அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், ஜானதிபதிக்கு நெருங்கிய பிரதிநிதிகள் மூலம் அவர் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்து, நினைத்துப் பார்க்க முடியாதளவு தொகையை வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட உரையாடல் பிரசித்தி பெற்ற இரகசியமாக இருக்கின்றது. அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை விலைகொடுத்து வாங்கும் வியாபாரத்துக்கு தலைமைதாங்கி இருப்பது வேறு யாருமில்லை, தன்னுடைய பிழைகளை மறைக்க பொய் கூறும் ஜனாதிபதியே என்பது தெளிவாகிறது. இதுதொடர்பில், சாட்சியும் எம்வசம் உள்ளது. அவை அனைத்தையும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு குளறுபடிகள் தீர்ந்ததும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு நங்கள் தயாராக உள்ளோம்.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கூட்டினால் அதனுள் கலவரம் வெடிக்கும் என்ற பயத்தில்தான், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதை நிறுத்தி வைத்துள்ளார் என்பதை தெரிவித்துள்ளார். எமது தரப்பில் கொலைகாரர்கள் யாரும் இல்லை என்பதையும், ஜனாதிபதி அவர்களின் புதிய தரப்பில்தான் போதியளவு கொலைகாரர்கள் உள்ளனர் என்பது, இந்நாட்டில் சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த விடயமாகும். அதன்படி பாராளுமன்றத்தில் கொலை கூட நடக்கும் என்று பயப்பட வேண்டியது ஜனாதிபதி அவர்கள் அல்ல, நாங்கள் தான்.
எவ்வாறாயினும் ஜானாதிபதியவர்கள் பாராளுமன்றத்தை கூட்டாமல், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் என்னவென்றால், கோடிக்கணக்கிலான காசு பணம் கொடுத்தும், அமைச்சுப் பதவிகளை ஏலத்தில் விட்டும், எமது பக்கம் உள்ளவர்கள் அவர்களின் பக்கம் செல்லவில்லை என்பதே ஆகும். இதனடிப்படியில், ஐக்கிய தேசிய முன்னணி, காசுக்காக தனது கட்சியை காட்டிக் கொடுக்காத கொள்கையுடைய பெரும்பான்மையான அங்கத்தவர்கள் உள்ள கட்சி என்பதை நாம் சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
அதேபோன்று, 2015 ஜனவரி 07 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமராக நியமித்த பொழுது ஐக்கிய தேசிய கட்சிக்கு 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 2015 இல் 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்தாலும் அன்றிலிருந்து, எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின், ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரின் அரசாங்கத்திற்கும், அவரின் கொள்கைகளுக்கும் எல்லா சந்த்தர்ப்பத்திலும் முன்னின்றுள்ளார் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதனால் பெரும்பான்மை சம்பந்தமான எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு 2015 ஜனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியது. அதன்பிறகு எங்களது அரசாங்கத்தின் முதல் வரவு – செலவுத் திட்டம் பெப்ரவரி 07 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி எமது வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 104 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் கிடைத்ததுடன் 103 பெரும்பான்மை வாக்குடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று, 2015 ஏப்பிரல் 28ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 19 வது திருத்த சட்டத்தின் போது, அதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிக்காமலும், 07 உறுப்பினர்கள் சமூகளிக்காமலும் அதன்படி 5/6 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இக்காலகட்டத்தில் எமக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை குறைவாக இருக்கவில்லை. அதற்காக பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும் இல்லை. 2015 இல் இருந்து இதுவரையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற எல்லா வாக்கெடுப்புக்களிலும் வெற்றியடைந்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரதமருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யப்பட்டு, முன்னெடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரனையிலும் அவர்கள் எதிர்பார்க்காத வகையில், வெற்றிபெற ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்தது. அந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் 26 சமூகளிக்காத உறுப்பினர்களும் உள்ளடங்கலாக 46 கூடிய வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இதனடிப்படையில்,பாராளுமன்றத்தில் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பெரும்பான்மை தொடர்பாக எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அதன்படி ரணில் விக்கிரமசிங்க பிரதமரின் நாகரீக தன்மை, கலாச்சாரம் மற்றும் குடும்ப பின்னணியைக் கொண்டு கோபம் மற்றும் ஆக்ரோஷம் அடைந்த ஜனாதிபதியால் சட்டபூர்வமான பிரதமரை அகற்றியதும், பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததும் முழுமையாக சர்வதிகார வெறியால் ஆவேசமடைந்த புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை என்பது தெளிவாகின்றது.
இந்த நாகரீகமற்ற செயலுக்கு விரோதாமாக பயமின்றி எழுந்து நின்ற கெளரவ சபாநாயகர் அவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க, ஜனாதிபதி தமதுரையில் நீண்ட நேரத்தை ஒதுக்கியிருக்கின்றார்.
ஜனநாயகம் என்பது நிறைவேற்று அதிகாரம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றம் எனும் மூன்று தூண்களைக் கொண்டுள்ளது. அதற்காக அரசுரிமை மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் இல்லாத சூழ்நிலையில், அரசியலமைப்பின் சுயாதீனத்தை பாதுகாக்க தோள் கொடுப்பது சபாநாயகரின் கடமையாகும். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்க அவர் கடமைப்பட்டுள்ளார். அதேபோன்று, பொதுமக்களின் இறையாண்மை சம்பந்தமான உரிமையும் அவருடையது. அதற்காக அவர் பயமின்றி முன்னின்றார்.
சூழ்ச்சியாளர்களின் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் சபாநாயகர் அவர்கள் முன்னெடுத்த தைரியமான நடவடிக்கைகளுக்காக நாம் அனைவரும் கடமைப்பட்டுளோம். அதேபோன்று அவரின் உயிரைக் காப்பாற்றுவது ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் அனைத்து குடிமகனினதும் கடமை என்பதை நினைவூட்ட வேண்டும்.
இறுதியாக கூறுவது என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சபையை உருவாக்கிய இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் முழுமையான விருப்பத்தை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரி, அவரின் வழக்கமான கீழ்த்தரமான முறையை கையாண்டுள்ளார்.
அவ்வாறெனின் அதற்கு எதிராக உயர் சுதந்திர ஜனநாயகத்தை நம்பி, அதற்கு மதிப்பளித்த மக்களுடன் நாம் தைரியமாக சுதந்திரத்தின் உச்சத்திற்கு செல்லத் தயாராக உள்ளோம்.
13.11.2018
