கடந்த 2015 ஜனதிபதி தேர்தலில் தொண்டமான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்தார். அவர் தோற்ற பின் அவரையே கட்டிப்பிடித்துக்கொண்டிராமல் ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை ஏற்று ஐ.ம. சுதந்திர முன்னணியின் தோழமை கட்சியாக ஆதரவு கொடுத்தார்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தனியாகவும், ஜனாதிபதியின் கட்சியிலும் தொண்டமானின் கட்சி போட்டியிட்டது. சில இடங்களில் தனியாக வென்ற போது ஆட்சியமைக்க சில ஆசனங்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில் மஹிந்தவின் கட்சியும் சில ஆசனங்கள் பெற்றதால் அவர்களுடன் இணைந்தால் ஐ. தே. க ஆட்சியமைப்பதை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
உடனடியாக ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்ட தொண்டமான் மஹிந்த கட்சியுடன் இணைந்து சபையில் ஆட்சியமைப்பது பற்றி பேசியுள்ளார்.
இந்த இடத்தில் ஜனாதிபதி மைத்திரியை பாராட்ட வேண்டும். தனது கட்சியுடன் உள்ளவர் தனது எதிரிக்கட்சியுடன் உள்ளூராட்சி சபையில் சேர்வதை பலரும் தடுக்கவே செய்வர். ஆனால் ஜனாதிபதி மைத்திரி இதற்கு பச்சைக்கொடி காட்டினார். அதன் படி சில சபைகளில் மஹிந்த கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதாக தொண்டமான் அறிவித்தார்.
அத்தோடு நின்று விடாமல் ஜனாதியையும் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு தேசிய அரசியலில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதான் சிறுபான்மை அரசியலின் சாணக்கியமாகும்.
முஸ்லிம் சமூகம் என்றால் அது என்ன மைத்திரியுடன் இருக்கும் நீங்கள் மஹிந்தவுடனும் இருக்கிறீர்கள் என மடத்தனனாக எள்ளி நகையாடியிருக்கும். கட்சி என்றால் அது மதம் போன்று பார்த்திருக்கும். ஆனால் மலையக மக்கள் தொண்டமானின் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டார்கள். காரணம் தாம் யார், தாம் எப்படி இந்த நாட்டில் சாமர்த்தியமான அரசியலை முன்னெடுப்பது என்பதில் மிகவும் தெளிவானவர்களாக உள்ளனர்.
இத்தகையதொரு அரசியலை மஹிந்தவின் தோல்வியின் பின் உலமா கட்சியும் செய்து காட்டியது. ஆனால் முழு முஸ்லிம் சமூகமும் எம்மை விமர்சித்து நையாண்டி பண்ணியதே தவிர எமது சமூகத்துக்கான தூர நோக்கு அரசியல் வழி காட்டலை புரியவில்லை.
இன்று முஸ்லிம் சமூகமோ வெட்டினாலும் பச்சை, எதுவும் செய்யாவிட்டாலும் மரம்தான் என முட்டாள்த்தனமாக செயற்பட்டு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை தினமும் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.
ஆகவே தொண்டமானின் இத்தகைய சாணக்கிய, சாதுர்ய அரசியலை உலமா கட்சி பாராட்டுவதுடன் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் சமூகமும் தொண்டமானின் அரசியலில் பாடம் கற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
ஆகவே தொண்டமானின் இத்தகைய சாணக்கிய, சாதுர்ய அரசியலை உலமா கட்சி பாராட்டுவதுடன் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் சமூகமும் தொண்டமானின் அரசியலில் பாடம் கற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.