சிங்கம் பார்த்த சம்பிக்க

சிங்களவர்கள் ஒரு காலத்தில் விரும்பிப் பார்க்கும் வேற்று மொழிப் படங்கள் ஹிந்திப் படங்கள்தான்.ஆனால்,சமீபகாலமாக அவர்கள் தென் இந்திய தமிழ் படங்களை விரும்பிப் பார்ப்பது அதிகரித்துவிட்டது.

தமிழ் பேச முடியாவிட்டாலும் அதிகமான சிங்களவர்களால் அதை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் சிங்கள உப தலைப்புகளுடன் இப்போது படங்கள் வெளி வருகின்றமையாலும் சிங்களவர்கள் புதுப் படங்கள் வெளிவந்ததும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு சென்று பார்க்கின்றனர்.


இது இவ்வாரு இருக்க சிங்கள அரசியல்வாதிலும் தமிழ் படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.உதாரணத்துக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சூர்யா நடித்த சிங்கம் திரைப்படங்கள் மூன்று பாகங்களையும் பார்த்துவிட்டாராம்.


நாட்டுக்கு நல்லது செய்வதற்காக முழு அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொண்டு செயற்படும் ஓர் இளைஞனைப் பற்றியதுதான் அந்தப் படம் என்று அவரது சக நண்பர்களிடம் கூறி வருவதோடு அவர்களையும் பார்ப்பதற்குத் தூண்டுகிறாராம்.

எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -