கல்முனை மாநகர ஆணையாளரை பாராட்டும் நாபீர் பௌண்டேஷன்...!

எம்.வை.அமீர் -
டந்த 13 ஆம் திகதி கல்முனை மாநகர எல்லைக்குள் இருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குள் இருந்து சுமார் 80ஆயிரம் கிலோ கிராம் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்காக கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியுடைய செயற்பாடுகளை பாராட்டுவதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை மாநகரசபையின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரித்து அப்பிராந்திய மக்களினதும் அவலங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாபீர் பவுண்டேஷனின் தலைவர் நாபீர் உதுமான்கண்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி சபையின் ஊடாக மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இவைகள் போன்ற செயற்பாடுகளைத்தான் சாய்ந்தமருதில் கூட உள்ளுராட்சிசபைக் கோரிக்கை அந்த மக்களால் முன்வைக்கப்படுவதற்கு இவைபோன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப் படாததும் ஒருகாரணமாகும். என்றும் குறிப்பிட்டுள்ள நாபீர், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபைக் கோரிக்கை என்பது புரையோடிப்போயுள்ள ஒன்று என்றும் அதனை வழங்கியே தீர வேண்டும் என்றும். அரசியல்வாதிகள் கடந்தகாலங்களில் தங்களுக்குள் மோதிக்கொண்டதைத் தவிர்த்து இவ்வாறான சுத்தப்படுத்தும் திட்டங்களை ஆரம்பித்து செயற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எது எப்படியாகினும் ஆணையாளர் ஜே.லியாகத் அலி எடுத்த அதிரடி நடவடிக்கையை பாராட்டுவதாகவும் குறித்த செயற்பாடுகளை தொடராக மேற்கொள்ள வேண்டும் என்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த அனைத்துத்தரப்பினருக்கும் மீண்டும் நாபீர் பவுண்டேஷனின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்த்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -