தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பாத்திமா வித்தியாலய பொது விளையாட்டு மைதான புனர்த்தாபன வேலைகள் இன்று 16 திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மைதானத்திக்கு 02 மில்லியன் ரூபா நிதியினை விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஒதுக்கியிருந்தார்.
அதேவேளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் வேண்டுகோளிக்கினங்கவே இந்நிதி மைதான புனரமைப்புக்கு ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.ஸனூஸ்,தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி,பிரதேச சபை செயலாளர் விஷ்னு என பலரும் கலந்து கொண்டனர்.