சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சுகயீனக்காப்புரித்துக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு..!

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் மகளிர் தின வைபவம் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவகத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் கலந்து கொண்டு பெண்களின் சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த வைபவத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் கிராம மட்ட தலைவிமார் கலந்து கொண்டனர்.

இதன் போது சல்மா ஹம்சாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான கொடுப்பனவு திட்டத்தின் கீழ் சுகயீனக்காப்புரித்துக்கான கொடுப்பனவாக ஒருவருக்கு 25000 ரூபாவும் இரண்டு பேருக்கு தலா ஒருவருக்கு 8000 ரூபாவும் இன்னுமொருவருக்கு 4000 ரூபா கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -