திருகோணமலையில் பன்றி இறைச்சி மீட்பு..!

எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி எட்டரை கிலோ கிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (10) மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 29வயதுடைய நபர் ஒருவரேயே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் கந்தளாயில் இருந்து அக்போபுரவிற்கு மோட்டார் சைக்கிளில் அனுமதிப்பத்திரமின்றி எட்டரை கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே போக்குவரத்துக் கடமையில் இருந்த பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -