எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதனால் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகளும் அரையடிக்கு சனிக்கிழமை (12)மாலையில் திறந்துவிடப்பட்டுள்ளதாக கந்தளாய் குளத்தின் நீர்ப்பாசனத் பொறியியலாளர் டபிள்யூ.எல்.விபுல புத்திக்க தெரிவித்தார்.
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் ஒரு இலட்டத்துக்கும் அதிக கன மீற்றரில் காணப்படுவதாகவும் பொறியியலாளர் தெரிவித்தார்.
அத்துடன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மெடியாவகுளம் மற்றும் இந்திக்குளம் ஆகியவற்றின் வான்கதவுகளும் கடந்த வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்ச்சியாக பெய்து வருவதினால் நெல்வயல்கள் நீரில் மூழ்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


