சேலை உடுத்த ஓநாய்!

ழக் கடலிலே ஓலமிடும் ஒலி
'ஐநா' உனக்கின்று கேட்கிறதா...?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா....?

காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான்
மூளை எடுத்தவன் உண்ணுகிறான்
வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..?
வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா...?

பாலை வனம்போல மாறும் மனங்களால்
பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம்
சேலை உடுத்தந்த ஓநாய் 'விராதி'னால்
மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்...

ஏழை எமக்கின்று வாழ வழிகொடு
ஏக இறைவனே கெஞ்சுகிறோம்
நாளை விடியுமா..? நாளை முடியுமா..?
நாடே துரத்தினால் என்ன செய்வோம்

கூறு கெட்ட எங்கள் அரபுக் குதிரைகள்
குள்ள நரிகளின் பொதிசுமக்க
யாரு கெட்டாலென்ன கவலை எமக்கில்லை
என்ற மனங்களோ குதூகலிக்க

சாந்த நெறிதந்த புத்தரின் போதனை
ரத்தத்தில் மூழ்கியே தத்தளிக்க
காந்தியம் பேசியே கயவர்கள் பர்மாவில்
காடைத்தனம் செய்து கொக்கரிக்க..

ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி
'ஐநா' உனக்கின்று கேட்கிறதா...?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா....?

கவிஞர் பொத்துவில் அஸ்மின்-
திரைப்பட பாடலாசிரியர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -