நா.நவோஜ்-
வெசாக் தினத்தினை முன்னிட்டு கல்குடா பொலிசார் மற்றும் சிவில் அமைப்புக்கள் இனைந்து ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் பௌத்த குருமாரின் பிரித் ஓதுதல் நிகழ்வும் இந்துக் குருக்களின் வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்றது.
வறிய நிலையில் வாழும் குடுப்பத்தினருக்கான பாடசாலை உபகரணங்கள் உலர் உணவுப் பொதிகள் மற்றும் குடி தண்ணீர் போத்தல்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பொதுமக்களுக்கு தானங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரெட்ன தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும் ஏறாவூர் பிரதேச பொலிஸ்அத்தியட்சகர் எகலவெல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இவ் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.ச
.jpg)
.jpg)
.jpg)

.jpg)