மஹிந்த அமரவீரவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு பதில்!

ந்திய - இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அமைச்சரின் கருத்து அதற்கு உதவிகரமாக இருக்காது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க ஆண்டுக்கு 65 நாட்களுக்கு மட்டும் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 

இந்த பரிந்துரையை நிராகரித்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, 65 மணி நேரம் கூட இந்திய மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கை மீனவர்கள் விவகாரத்திலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. 

மேலும், இலங்கை அரசுடன் இணைந்து ஏற்கத்தக்க முடிவை மேற்கொள்ள இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -