நாடாளுமன்ற முசுப்பாத்தியும் ஓரங்களில் படுத்துறங்கும் எம்பீக்களும் -படங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்படவுள்ள விசாரணையை மீளப் பெறும்  வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று மீண்டும் நாடாளுமன்றம் ஆரம்பிக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஹிரு





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -