தமிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நானும் எனது சகோதர் மஹிந்தவும் (முன்னாள் ஜானதிபதி) பெற்ற நற்பெயர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த புதிய அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ஷ.
முன்னைய ஆட்சிக் காலத்தில் தான் ஓர் அரச ஊழியராகவே இருந்தார் எனத் தெரிவித்திருக்கும் அவர் ஊதியத்துக்கு மேலாக சில ரூபாக்களை யேனும் தான் சேர்க்கவில்லை என்றும் மேலும் விளக்கமளித்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் தான் வங்கிக் கணக்குகளையோ அல்லது இரகசிய கணக்குகளையோ வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் ஹுனுப்பிட்டிய வங்கியில் மட்டுமே தனக்கு கணக்கு இருக்கிறது என்றும் அந்தக் கணக்கு 30 வருடங்களின் முன்னர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக தொடங்கியதாகவும் கோத்தபாய மேலும் சொன்னார்.
மேலும் ஹுனுப்பிட்டிய வங்கியில் மட்டுமே தனக்கு கணக்கு இருக்கிறது என்றும் அந்தக் கணக்கு 30 வருடங்களின் முன்னர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக தொடங்கியதாகவும் கோத்தபாய மேலும் சொன்னார்.
