ஊதியத்துக்கு மேலாக சில ரூபாக்களை யேனும் தான் சேர்க்கவில்லை -கோத்தபாய

மிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நானும் எனது சகோதர் மஹிந்தவும் (முன்னாள் ஜானதிபதி) பெற்ற நற்பெயர்களுக்குக் களங்கம் ஏற்படுத்த புதிய அரசாங்கம் திட்டமிட்டு நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்‌ஷ. 

முன்னைய ஆட்சிக் காலத்தில் தான் ஓர் அரச ஊழியராகவே இருந்தார் எனத் தெரிவித்திருக்கும் அவர் ஊதியத்துக்கு மேலாக சில ரூபாக்களை யேனும் தான் சேர்க்கவில்லை என்றும் மேலும் விளக்கமளித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் தான் வங்கிக் கணக்குகளையோ அல்லது இரகசிய கணக்குகளையோ வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் ஹுனுப்பிட்டிய வங்கியில் மட்டுமே தனக்கு கணக்கு இருக்கிறது என்றும் அந்தக் கணக்கு 30 வருடங்களின் முன்னர் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக தொடங்கியதாகவும் கோத்தபாய மேலும் சொன்னார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -