அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பிரிமியர்லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் (10.08.2014) அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாக்ஸ்மன் பிளக்சிப் மற்றும் மாக்ஸ்மன் கிங்ஸ் இலவன் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாக்ஸ்மன் பிளக்சிப் அணி நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்களில் 4விக்கட்களை இழந்து 94ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 95ஓட்டங்களை வெற்றி இழக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாக்ஸ்மன் கிங்ஸ் இலவன் அணி ஓட்டங்களை பெறுவதில் தடுமாறி சகல விக்கட்களையும் இழந்து 45ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment