பௌத்­தர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அவப்­பெ­ய­ருக்கு அரசே பொறுப்­புக்­கூற வேண்­டு­ம்- ரணில்

மூவின மக்­க­ளி­டை­யேயும் கட்­டிக்­காத்து கொண்டு வரப்­பட்ட இன ஐக்­கியம் மஹிந்த தலை­மை­யி­லான ஆட்­சியில் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது என தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சர்­வ­தேச ரீதியில் பௌத்­தர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அவப்­பெ­ய­ருக்கு அரசே பொறுப்­புக்­கூற வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்­டுள்ளார்.

கட்­சிக்கு புதிய அங்­கத்­த­வர்­களை இணைத்­துக்­கொள்ளும் நிகழ்வு கடந்த சனிக்­கி­ழமை கம்­பளை நகரில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து பேசு­கையில்;

தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்கள் ஐக்­கி­யத்­துடன் செயற்­பட்­ட­மை­யி­னா­லேயே எமது நாட்­டிற்கு சுதந்­திரம் கிடைத்­தது. அந்த ஐக்­கி­யத்­தினை கட்டி காக்க வேண்­டிய பொறுப்பில் உள்ள அர­சாங்கம் அதனை சீர்­கு­லைத்­துள்­ளது. அதனால் இன்று தமிழ், முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து பௌத்­தர்கள் வேறுப்­பட்டு இருக்­கின்­றனர். இன்று சர்­வ­தேச ரீதியில் பௌத்­தர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அவப்­பெ­ய­ருக்கு அரசே பொறுப்­புக்­கூற வேண்டும்.

வெளி­நா­டு­களில் அர­சுக்கு அப­கீர்த்தி ஏற்­படும் தரு­ணங்­களில் அமைச்­சர்­க­ளையும் தூது­வர்­க­ளையும் அனுப்பி அதனை சரி செய்­கின்­றனர். ஆனால் ஒரு சிலர் செய்யும் தவ­று­க­ளுக்­காக இன்று சர்­வ­தேச ரீதியில் பௌத்­தர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அப­கீர்த்­தியை நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

சிறு­பான்மை சமூ­கங்கள் இன்று எமது நாட்டில் ஒரு அச்­ச­மான சூழ்­நி­லை­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றன. இனங்­க­ளுக்­கி­டையே நிலவும் அச்ச உணர்­வினை நீக்கி அனைத்து இனங்­களும் ஒற்­று­மை­யு­டனும், சுதந்­தி­ர­மா­கவும் வாழ வழி­வகை செய்ய வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­திற்கு உண்டு என்­பதை அரசு மறந்­து­வி­டக்­கூ­டாது.அன்று பிர­பா­கரன் ஏனைய சமூ­கங்­க­ளி­டையே­யி­லி­ருந்து பௌத்­தர்­களை வேறுப்­ப­டுத்த முற்­பட்டார். ஆனால், அதனை அவரால் செய்ய முடி­ய­வில்லை. பிர­பா­க­ரனால் அன்று செய்ய முடி­யாமல் போனதை இந்த அர­சாங்கம் இன்று செய்து கொண்­டி­ருக்­கின்­றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :